தேனி மார்ச் 18
உலக தண்ணீர் தினத்தை (22.03.2025) முன்னிட்டு 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) அவர்களால் நடத்தப்பட உள்ளது.
கிராம சபை கூட்டத்தினை 130 கிராம ஊராட்சிகளிலும் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையில் நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்பிக்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்