தஞ்சாவூர் பிப்.22
தஞ்சாவூரில் உலக தாய் மொழி நாள் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் அரண்மனை வளாகத்தில் இருந்து கரந்தை தமிழ்ச்சங்கம் வரை நடைபெற்ற பேரணியில் தமிழில் பேசுவோம் பார் முழுவதும் தமிழை பரவ செய்வோம் உலக மொழி களில் நேசிப்போம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.
பேரணியில் கரந்தை தமிழ்ச் சங்கம் செயலர் சுந்தரவதனம் தலைமையில் தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி முதல்வர் ராஜாமணி, கலைமாமணி மருத்துவர் சு நரேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.