தஞ்சாவூர்.மார்ச்.15
இந்திய மருத்துவ சங்கம், தஞ்சாவூர் ரோகினி மருத்துவ மனை இணைந்து உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தஞ்சாவூர் இந்திய மருத்துவ சங்க தலைவர் கார்த்திகேயன், செயலர் சரவணவேல் ,பொருளாளர் மத்தீ யாஸ், தர்மராஜன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறுநீரக பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து சிறுநீரகத்தைப் பற்றியும், அதனை பாதுகாப்பது எப்படி ?என்று மனவளக்கலை பேராசிரியரும் ,எழுத்தாளரும், அகில இந்திய சிறுநீரகசிறப்பு மருத்துவ நிபுணருமான மோகன்தாஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்
நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சிவகுமார்,முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக இயக்குநர் கணேசன் செய்திருந்தார்.