தஞ்சாவூர் மே.21.
தஞ்சாவூரில் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ்கிளப் மற்றும் ரோகினி மருத்துவமனை இணைந்து உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் லயன் பிரபு ராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இதய நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்
மனவளக்கலை பேராசிரியரும், எழுத்தாளரும் சிறுநீரக நோய் சிறப்பு நிபுணருமான டாக்டர் மோகன் தாஸ் கலந்து கொண்டு ரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பொதுமக்களு க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்தப் பேரணியில் லயன்சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நிகழ்வில் வட்டார தலைவர்கள் லயன் பாலகிருஷ்ணன் ,துணை செயலாளர் லயன் மணி ,லயன்கள் ரோஸ்விக் .வி. ராயன், பொன் திருப்பதி, சந்திரசேகர் , செல்வ ராஜ் , முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிளன்மார்க் நிறுவனத்தைச் சேர்ந்த அமலதாஸ், இப்ராஹீம் ஆகியோர் செய்திருந்தனர்
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics