நாகர்கோவில், மே 26:
நாகர்கோவில் அருகே திருமணமான மகள் கணவரை பிரிந்து வந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவிலை அடுத்த தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா. (62) விவசாயி. இவரது மனைவி பாமா (52) இவர்களது மகள் ரம்யா. திருமணம் ஆகி தற்போது கணவருடன் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மகள் அவரது கணவரை பிரிந்து வந்த நாளிலிருந்து பாமா மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் 3 மணி அளவில் கோயிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தங்கையா மற்றும் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தம்மத்து கோணம் மன்னராஜா தெருவில் உள்ள திருக்குளத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் குதித்தாராம். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இருந்தார்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் குளத்தில் குதித்து தற்கொலை செய்தது பாமா என்பதும் அவர் விஷம் குடித்துவிட்டு குளத்தில் குதித்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு பின் தனது மகளும் மருமகனும் பிரிந்து வாழும் சோகத்தில் பாமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜகமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.