தருமபுரியில் தமிழக வெற்றி கழக மாவட்ட மகளிர் அணி சார்பில் கட்சியின் கொள்கை தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியு மன அஞ்சலை அம்மாள் 135-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா. சிவா தலைமையில் தருமபுரி நான்கு ரோடு அண்ணா சிலை அருகில் அஞ்சலை அம்மாள் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து , மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மேற்கு மாவட்ட துணை செயலாளர் வீரமணி,
பொருளார் கோபி , மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா, கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திலகா மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் , கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,
மாவட்ட, நகரம் , ஒன்றியம் , கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



