மார்த்தாண்டம், மார்- 7
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் தெரசா மெர்சி (27). மருதூர் குறிச்சியை சேர்ந்தவர் ஞானதாஸ் மகன் எட்வின் (33). இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திருமண நடந்தது. திருமணத்தின்போது கணவர் வீட்டில் கேட்ட நகை, சீர்வரிசை மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.
திருமணம் முடிந்த ஒரு ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மனைவி ராசி இல்லாதவர் என கணவர் விட்டார், கணவர் இணைந்து துன்புறுத்த தொடங்கியுள்ளனர். மேலும் மோசமான நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததாகவும், மனைவி அழகாக இல்லை எனவும் கொடுமைப்படுத்தி விவகாரத்து கேட்டதாக தெரிகிறது.
இதனால் வேதனை அடைந்த தெரசா மெர்சி பள்ளியாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கணவர் எட்வின், அவரது தந்த ஞானதாஸ், தாய் செல்வி, தங்கை ரேஷ்மா, தம்பி டேனியல் ஆகிய ஐந்து பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.