திருப்பூர்மே.17 கவுண்டநாயக்கன்பாளையம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்ததாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டு.
பாதக செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது திருட்டு வழக்குகள் பதிவு செய்து போலீசார் அவர்களை காப்பாற்றுவதாக கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டு.
மனித கழிவுகள் கலந்த மேல்நிலை நீர் தொட்டி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
இந்த மலம் கலந்த தண்ணீரை மாநகராட்சி கவுன்சிலர், அதிகாரிகள் குடிப்பார்களா என அப்பகுதி மக்கள் ஆவேசம்.
திருப்பூர் மாநகராட்சி 2 -வது மண்டலம் உட்பட்ட 6 வார்டு – ல் உள்ள கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 17 1/2 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி உள்ளது.
இந்த குடிநீர் தொட்டியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பல்வேறு வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது
இந்த நிலையில் நேற்று முன்தினம் சமூக விரோதிகள் இந்த குடிநீர் தொட்டியில்
மலம் கழித்து உள்ளதாகவும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டு தெரிவித்தனர்,
இந்த சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்,
இந்த செயலில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்யாமல் இரண்டு பேரை மட்டும் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துவிட்டு அவர்கள் மீது கஞ்சா, மலம் கழித்தது தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யாமல் திருட்டு வழக்கு மட்டுமே பதிவு செய்து பெயரளவிற்கு மட்டுமே விசாரணை நடத்துவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தக்க தொட்டியில் கஞ்சா போதை ஊசி ஆசாமிகள் சர்வ சாதாரணமாக மேலே சென்று மது அருந்துவதும்,கஞ்சா புகைப்பதும், குளிப்பதும் மலம் கழிப்பதும் என தொடர்ந்து ஒலிங்கன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையை தொடர்ந்துள்ளது இந்த நிலையில்,
இந்த பிரச்சனைக்கு பிறகு
மாநகராட்சி ஊழியர்கள் அவசர அவசரமாக குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் இருக்கக்கூடிய முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர்,
அவசரகதியில் தற்போது தண்ணீரைமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றக்கூடாது என்றும் முழுவதும் சுத்தம் செய்த பின்னர் ஏற்ற வேண்டும் மீறி தண்ணீரை ஏற்றி வினியோகம் செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை இந்த பகுதி மக்கள் ஈடுபடுவதாகவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
சேரும் சகதியும் ஆக இருக்கக்கூடிய
நீர்த்தேக்க தொட்டியை முழுவதும் சுத்தம் செய்து தண்ணீரை தேக்கி விநியோகிக்க வேண்டும்,அருகில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், காவலர்கள் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது என்பதற்காக உரிய விசாரணையை போலீசார் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக
நிஷாந்த் (19) சஞ்சய் (22) என்ற இரண்டு பேர் மட்டும் கைது செய்தது மற்றவர்களை இது தப்பா விட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.