விளாத்திகுளம், டிசம்பர் 02 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகிராம் சூரத்குமாரின் 107-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 வது ஆண்டாக யோகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விசிறி விநாயகருக்கு பூஜை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், அதிகாலையில் சிறப்பு யாகசாலை மற்றும் பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 1 மணி அளவில் பகவான் யோகிராம் சூரத்குமாருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.



