மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதையடுத்து, அககட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் அக்கட்சியினர் கிட்டப்பா அங்காடி முன்பு பட்டாசு வெடித்தும் கைத்தட்டியும், கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவில் சேதுராமன், மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன், ஒன்றியதலைவர் ஈழவேந்தன், நகர தலைவர் ராஜகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில் ரவி, பட்டியலணி மாநில துணை தலைவர் அய்யா சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் பாரதிகண்ணன், மகளிரணி மணிமேகலை மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.