ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்திரபட்டி, கல்லாவி, மேட்டுதாங்கல், வீரனகுப்பம், திருவணபட்டி, பெரிய கொட்டகுளம் உள்ளிட்ட 6 ஊராட்சியில்
வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்தது.
இக்கூட்டம்
சட்டமன்ற உறுப்பினர் டி.எம் தமிழ் செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் கழக துணை பொதுச் செயலாளருமான கே.பி முனுசாமி கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை, நீங்கள்தான் எம்.ஜி.ஆர், ஊத்தங்கரை தொகுதி அதிமுக கோட்டை , நான்காவது முறையாக வெற்றி பெற நீங்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார் .
முன்னதாக ஒன்றிய செயலாளர் வேங்கன் வரவேற்றார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீத், மருத்துவ அணி மருத்துவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், வேடி, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வைரம்பட்டி முருகன், அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் செந்தில்,
ஒன்றிய விவசாயி செயலாளர் ரவி ராஜன், கல்லாவி முன்னாள் தலைவர் ராமன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் குணசேகரன், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் காளிதாஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் ஜெயராமன், மணிகண்டன், ஒன்றிய துணைச் செயலாளர் விவசாய அணி அழகேசன், எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் பசுபதி, இலக்கிய அணி சரவணன், ஊராட்சி செயலாளர் வசந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.