அஞ்சு கிராமம் நவ-12
தென் தமிழகத்தில் பழமைவாய்ந்ததும்,பிரிசித்தி பெற்றதுமான மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மடம் படித்துறையில் ஆராட்டு விழா நடந்தது. .காப்புகட்டு திருவிழா தொடங்கி ஆறாவது நாளில் நரகாசுரனை முருகபெருமான் சூரசம்ஹார விழாவில் வதம்செய்யும் நிகழ்ச்சி நடந்தது.10ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3 மணிக்கு மருங்கூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து வெள்ளித் குதிரையில் மயிலாடி ஆராட்டு விழாவிற்கு எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.பரமசூரனை வதம் செய்து கோபத்தில் இருக்கும் சுவாமி கோபம் தனிய தீர்த்தவாரி மடத்தில் பால்,பழம்,மஞ்சள்,கலகம்,நெய்,இளநீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.அதன்பின்பு ஆற்று படித்துறையில் இறங்கி நீராட்டும் நிகழ்ச்சி நடந்தது. நீராட்டு விழாவின்போது பக்தர்களின் ஆரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.அதன்பின்பு சர்வ அலங்காரத்துடன் வெள்ளி குதிரையில் மயிலாடி,சேந்தன்புதுர்,மருங்கூர்,குமாரபுரம் தோப்பூர் வீதிகள் வழியாக மக்களுக்கு ஆசி வழங்கி, மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு சென்றார். வழி நெடுகிழும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தனர்.நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அம்புரோஸ், பேரூராட்சி தலைவிகள் விஜயலட்சுமி,லெட்சுமி, பேரூராட்சி துனைதலைவர்கள் சாய்ராம், அஞ்சை காந்திராஜ்,பாலரோகிணி,, ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் நாகராஜன் செயலாளர் நகணேசன், பொருளாளர் சுடலையாண்டி,அதிமுக பேரூர் செயலாளர்கள்,மயிலை மனோகரன, ,திமுக பேரூர் டாக்டர் சுதாகர் மற்றும்பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.