மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் சுமார் 39 21.05.2025, புதன்கிழமையன்று திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உதவி ஆணையர் பிரதீபா , ஆய்வர் சாவித்திரி திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணா தேவி, பி.ஆர்.ஓ. முருகன்.
ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 1, 06,78,047/- ரொக்கமும் மற்றும் தங்கம் 9 கிராம், வெள்ளி 55 கிராம் ஆகியன கிடைக்கப் பெற்றாதாக
கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியின் போது திருக்கோவில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.



