சட்ட விரோதமாக அரசு மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் . தங்கதுரை அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் 01.06.2024 ம் தேதி பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரிகை – மாலூர் ரோடில் உள்ள சந்தார் கம்பெனி பின்புறம், ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் வாகன தணிக்கை செய்தபோது அத்திமுகம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (38) s/o வெங்கடசாமி, என்பவர் ரூ.23224/- மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபானம் 192 பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டும் எதிரி மஞ்சுநாத் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது வாட்ஸாப்ப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.