மார்த்தாண்டம், ஜூன் . 3 –
மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் பிரபலமான குருசடி ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.