நாகர்கோவில் – மே – 22,
கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக காளிகேசம் காளி கோவிலில் நடைபெறும் காளி பூஜைக்கு 23ம் தேதி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிகேசம் அருள்மிகு காளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு ஏற்கனவே உள்ளதாலும்,இவ் விழாவிற்கு (காளிகேசம் காளி கோவிலுக்கு) பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என குமரி மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் அழகியபாண்டிபுரம் ரேஞ்சர் மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.