மதுரை பிப்ரவரி 8,
மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்