தஞ்சாவூர். மே. 10.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை யில் உள்ள அரசு பள்ளி, உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் பயிலும் மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 63 அரசு பள்ளிகளும், 29 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 18 தனியார் பள்ளி களும் ஆக மொத்தம் 110 பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டது.
இத்தேர்வு மையங்களில் 104 அரசு பள்ளிகளும் 40 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மற்றும் 85 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024-2025 ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் 12,307 பேர், மாணவி கள் 14,246 பேர் ஆக கூடுதல் 26,533 பேர் அவர்களில் மாணவர்கள் 11,584 பேர், மாணவிகளில் 13,854 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் 94.13 சதவீதம் பேரும், மாணவிகள் 97.25 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்ற 2023-2024 கல்வியாண்டி
ல் மாணவர்கள் 11,819 பேரும், மாணவிகள் 13,915 பேரும் ஆக கூடுதல் 25,734 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் மாணவர்கள் 10,710 பேரும், மாணவிகள் 13,342 பேரும் ஆக கூடுதல் 24,052 பேர் தேர்வாகியிருந் தனர். மாணவர்கள் 90.62 சதவீத மும், மாணவிகள் 95.88 சதவீதம் பெற்று சராசரியாக 93.46 சதவீதம் பெற்றிருந்தனர்
தமிழ்நாடு மாநில அளவில் சென்ற 2023-2024 கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டம் 26-ம் இடம் பெற்று தற்சமயம் 2024- 2025 கல்வி யாண்டில் மாநில அளவில் 13 இடத் தை பெற்றுள்ளது.
தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவில் 65 பள்ளிகளில் மாணவர் கள் 100 சதவீததேர்ச்சி பெற்றுள்ள னர்.
மேலும் 104 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024-2025 கல்வியாண்டில் மாணவர்கள் 4369 பேரும், மாணவிகள் 6018 பேரும் ஆக கூடுதல் 10387 பேர் தேர்வு எழுதினர்.அவர்களில் மாணவர்கள் 3946 பேரும், மாணவிகள் 5786 பேரும் ஆக கூடுதல் 9732 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 90.32 சதவீதமும், மாணவிகள் 96.14 சதவீதமும் பெற்று சராசரியாக 93.69 சதவீதம் பெற்றுள்ளனர்.
சென்ற 2023-2024 கல்வியாண்டில் மாணவர்கள் 4108 பேரும், மாணவிகள் 6000 பேரும் ஆக கூடுதல் 10108 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் மாணவர்கள் 3468 பேரும் மாணவிகள் 5626 பேரும் ஆக கூடுதல் 9094 பேர் தேர்வாகினர் மாணவர்கள் 84.42 ச சதவீதமும் மாணவிகள் 93.77 சதவீதமும் பெற்று சராசரியாக 89.97 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றனர்
தமிழ்நாடு மாநில அளவில் அரசு பள்ளிகள் சென்ற 2023-2024 ஆண்டு தஞ்சாவூர் வருவாய் மாவட்டம் 25- ம் இடத்தில் இடம் பெற்று தற்சமயம் 2024- 2025 ஆண்டில் மாநில அளவில் 12-ம் இடத்தை பெற்றது.
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள பார்வைத் திறன் குறையுடை யோடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய 10 மாணவர் கள், 6 மாணவிகள் என மொத்தம் 16 பேரும் தேர்ச்சி பெற்றனர். அரசு காது கோளாதோர், வாய் பேச இயலாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் 14 மாணவர்கள் 18 மாணவிகள் என மொத்தம் 32 பேர் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இருபள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதற்கு அதிகாரி கள் பாராட்டு தெரிவித்தனர்