பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாதிகள் முகாமினை அழித்தது.
இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.தீவிரவாகிகள் உயிரிழந்ததை கொண்டாட்டம் விதமாக இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு பா.ஜ., வினர் இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சுடலைமணி சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார் .இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் ,கொட்டாரம் பேரூர் தலைவர் ஆனந்த் கன்னியாகுமரி பேரூர் தலைவர் ஜெய ஆனந்த் மற்றும் பாஜக நிர்வாகிகள் வெங்கடேஷ் செந்தில் சுரேஷ் செந்தில் கண்ணியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.