மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சுவர்களின் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கும் வகையிலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கியமான பகுதிகளில் உள்ள சுவர்கள், பாலங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட சுவர்களில் மதுரைக்கு பெருமை சேர்க்கவும் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் வண்ணமயமான அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது தமிழ்நாடு பொது சொத்து அழிவு மற்றும் இழப்பு தடுப்பு சட்ட விதிகளின் படி (Tamilnadu Public Property Prevention of Destruction and Loss act, 1982) . எனவே மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், மீறி சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics