அரியலூர்,டிச;17
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள சித்தேரி ஏரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேற்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 1 ஆம் தேதி மண்டல பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஐயப்பனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து 18 படி அலங்கரித்து ஐயப்பனை வணங்கிய படி பாடல் பாடி மாலை அணிவித்த கன்னி சாமிகள் 18 படியில் சூடம் ஏற்றி படி பூஜை செய்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட கன்னி சாமிகள் மற்றும் அனைத்து குருசாமிகள் உபயோதாரர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
மேலும், ஐயப்பன் ஆலயத்தில் நேற்று மண்டல பூஜை முன்னிட்டு கோயிலில் சேவை செய்யும் குருசாமிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் 500 க்கும் மேற்பட்ட ஐயப்ப சாமிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு கோயிலின் சார்பில் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட ஐயப்பன் மாலை அணிந்த சாமிகள் பொதுமக்கள் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 04 மணி அளவில் செந்துறை – நெய்வனம் ஏந்தல் ஏரி கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தவர்கள் ஐயப்பன் உருவ சிலையை சிறு பல்லாக்கில் வைத்து பூ தோரணங்களால் அலங்கரித்து ஐயப்ப பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தவாறு கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்து செந்துறை சித்தேரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப ஆலயத்திற்கு வந்தடைந்தது பின்னர் ஐயப்பனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஐயப்பனை கோஷத்துடன் வணங்கி ஆலயத்தின் அருகில் உள்ள குளத்தில் ஐயப்பனை தெப்பத்தேர் விட்டனர். சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா என்று வணங்கியபடி ஐயப்பனின் திருமந்திரத்தை கூறி வழிபட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்