ராமநாதபுரம், பிப்.12-
மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் 15 வது வார்டு நிர்வாகிகள் தேர்வு, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு என்று முப்பெரும் விழா 15வது வார்டில் மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது .
விழாவில்
மமக தொண்டி பேரூர் தலைவர் செய்யது அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். 15வது வார்டு மமக கவுன்சிலர் பெரியசாமி ஏற்பாட்டில் மாவட்ட நிர்வாகிகள் 14 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் சமீமா பானு யான்பு இப்ராஹீம் அசன் சகுபர் உபயதுல்லா மகளிர் அணி மாவட்ட செயலாளர் சரிபா ஜைனுல் ஆப்தின் ஊடக அணி மாவட்ட செயலாளர் பகுருல்லா இளைஞரணி மாவட்ட செயலாளர் யாசிர் ஊடக அணி மாவட்ட பொருளாளர் சுல்த்தான் மாணவரணி மண்டல நிர்வாகி பகத் தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி மைதீன் அப்துல்லா அலாவுதீன் சேனா இப்ராஹிம் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தொண்டி சாதிப்பாட்சா மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள் . நிர்வாகிகள் தேர்வு மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றம் மனிதநேய மக்கள் கட்சியில் ஆண்கள் பெண்கள் உறுப்பினர் சேர்க்கை நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
150க்கும் மேற்பட்டவர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
15வது வார்டு நிர்வாகிகளாக நிர்வாகிகள் செயலாளர் மணிமாறன் பொருளாளர் மாரிமுத்து துணைச் செயலாளர் நாகராஜ் சாரதி, கருப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இளைஞர் அணி செயலாளராக குமார் வர்த்தக அணி செயலாளராக முருகானந்தம் தொழிலாளர் அணி செயலாளராக கோவிந்தன் மனித உரிமை மற்றும் நுகர்வோர் அனிச்செயலாளராக சாத்தையா மீனவர் அணி செயலாளராக முத்துக்கனி மகளிர் அணி செயலாளராக கோமதி ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கவுன்சிலர் பெரியசாமி நன்றி கூறினார்.