நாகர்கோவில் நவ 11
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா.என்று போலீசார் சோதனை செய்து வருகின்றனர் அதன்படி ஆசாரிபள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பார்வதிபுரம் பெருவிளை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்ததில்.இரு கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் காவல் நிலையம் உதவி காவல் ஆய்வாளர் ஜெசி மேனகா மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த இரு கடையிலிருந்து புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இரு கடைகளுக்கும் ரூபாய் 50,000 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். இதே கடையில் மட்டும் இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.