தருமபுரி மாவட்டத்தின் 46-வது மாவட்ட ஆட்சியாளராக சதீஷ் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியாருக்கு அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. தருமபுரி மாவட்டம் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் அரசு திட்டங்கள் அடிப்படை வசதிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகள் கோரிக்கைகள் கண்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்படும். மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் கூறினார்.



