தஞ்சாவூர் பிப்.28.
தஞ்சாவூர் மாவட்ட அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் கூறியதாவது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி முதல்வர் மருந்தகம், நமக்கு நாமே திட்டம் ,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் செயல் பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வீட்டு மனை பட்டா வழங்குதல், இ- சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டது
இதில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வருவாய்கோட்டாட்சியர் இலக்கியா மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (பொது )சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.



