நாகர்கோவில் ஜூலை 2
மாநில குற்ற ஆவண காப்பகம் (SCRB)ன் அறிக்கைப்படி புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தின்படி முதலாவதாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை(FIR) கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வண்ணம் அதிபயங்கரமாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய நபர் மீது இம்முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. அவர் மீது 281BNS r/w 181(3), 185 MV Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.