ஜன. 2
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களது மனதில் அது ஆழப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்திய கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற ராம்ராஜ் தன் முயற்சிகளை எடுத்து ஜனவரி 1 முதல் 6 வரை ராம்ராஜ் வேட்டி வாரமாக கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதுபுது ரகங்களை அறிமுகப்படுத்தி இந்திய கலாச்சார உடையான வேட்டியின் உபயோகம் பெருமளவில் உயர ராம்ராஜ் எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வெற்றி பெற்று வருகிறது.
இந்த ஆண்டும் வேட்டி வாரத்துடன் கூடிய தமிழர் திருநாளில் அனைவரும் பாரம்பரியத்துடன் பங்கெடுத்து பயன்பெறும் வண்ணம், ராம்ராஜ் இன்று விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் CULTURE CLUB கலர் சாட் மற்றும் வேட்டியுடன் அனைவரும் வாங்கும் விதமாக ரூ. 695/- சில்லறை விற்பனை விலைக்கு 13 வண்ணங்களில் வழங்குகிறது. ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாடவிருக்கும் வேட்டி வாரம் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வளர்ச்சி பெறும் வகையில் இந்த வாய்ப்பு அனைவரும் உடுத்தி மகிழ கலர் சர்ட் மற்றும் வேட்டி இணைந்து வழங்கப்படுகிறது.
ராம்ராஜ், விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடைய வாங்கும் விலையில் இந்த ஆண்டு வேட்டி வார கொண்டாட்டத்திற்கு இந்த அரிய வாய்ப்பாக கலர் சரட்டுடன் வேட்டியை இணைத்து விற்பனைக்கு விடுக்கிறது. இந்த கல்ச்சர் கிளப் COMBO PACK ரகங்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் மற்றும் ராம்ராஜ் கம்பெனி ஷோரும்களிலும் கையிருப்பு உள்ள வரை விற்பனையில் இருக்கும்.
வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனையாளர் கே.ஆர் நாகராஜன் -ராம்ராஜ் நிறுவனர், கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்து மகாத்மா காந்தி கண்ட கனவினை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து கடந்த 9 ஆண்டுகளாக வேட்டி வாரம் நிகழ்ச்சிக்கு புதுப் புது ரகங்களை அறிமுகப் படுத்தி வருவதாக கூறினார்.
தமிழர் பாரம்பரிய பண்டிகை பொங்கல் 2025 க்கான முதல் பரிசாக இந்த கல்ச்சர் கிளப் ரகங்கள் பயனளிப்பதாக இருக்கும்.
விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி. ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
மேற்க்கூறிய சலுகைகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தும் என்று நாகராஜன் அறிவித்தார்.