பூதப்பாண்டி நவ – 14-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் காளிஅம்மன் கோவிலில் வருகின்ற 15ம் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை பௌர்ணமி பூஜை விழா வெகு நடைபெற இருக்கிறது
அன்று காலை 7.00 மணிக்கு பக்திஇசையும்9.00 மணிக்கு ராஜமேளமும்9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்10.00 மணிக்கு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும்
அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜையும்12.00 மணிக்கு நாதஸ்வர மேளமும்மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனையும்
மதியம் 1.30 மணிக்கு அன்னதானமும்அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்நடைபெறுகிறது
இந்தபௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
விழாவிற்கான ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் செய்து வருகின்றனர்.