நாகர்கோவில் மே 22
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் நிரம்பியுள்ளது. இதேபோல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சானை அணை 49 அடியை எட்டியுள்ளது.சிற்றாறு 1 அணையின் 18 அடி கொள்ளளவு 11 அடியாகவும், சிற்றார் 2 அணை 11 அடியாகவும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ அருவியில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.