மதுரை மார்ச் 13,
மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் ராஜ்பிரதாபன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.