திண்டுக்கல் மறை மாவட்டத்தின் சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் மேற்கு மரியநாதபுரத்தில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் புதுப்பிக்கும் திருப்பணிகள் துவக்க விழா மற்றும்
மக்கள் மன்ற
சுற்றுச்சுவர் திறப்பு விழா,மதநல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு
சிறப்பு விருந்தினர்களாக மேதகு பேராயர் A.அந்தோணிபாப்புசாமி, மேதகு பேராயர் A. ஜூட் ஜெரால்ட் பால்ராஜ், மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி, மேதகு ஆயர் T.சகாயராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்கள். திருவருட் பேரவை கௌரவத் தலைவர் SKC .குப்புசாமி முன்னிலையில், திருவருட் பேரவை பொருளாளர் Dr.Ln. நாட்டாண்மை N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு திண்டுக்கல்லில் மதநல்லிணக்கம் சிறப்பாக உள்ளது என்று உரையாற்றினார்.இந்நிகழ்வில் திருவருட் பேரவை செயற்குழு உறுப்பினர் Rtn.C. பெஞ்சமின் ஆரோக்கியம் பங்கு பணியாளர் அருட்பணி பா.சௌந்தரராஜன், ஆசிரியர் மரியராஜேந்திரன், ஜான்பீட்டர் MC, ஊர் தலைவர் C.ஜான்போஸ்கோ, செயலாளர் S.அலெக்சாண்டர், பொருளாளர் A.ஜெயபிரகாஷ், துணை செயலாளர்கள் M.ராபர்ட் எட்வின், V. அகஸ்டின்ரூபன், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் பூசாரி பொன்வேல்மணி, K.சாதிக் , சலேசிய அருட் சகோதரிகள், பங்கு பேரவை, ஊர் நிர்வாக பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள், இளையோர் இயக்கம் மற்றும் பங்கு இறை மக்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.