பளுகல், பிப்- 23
பளுகல் அருகே ராமவர்மன் சிறை என்ற பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (58)பெயிண்டர். இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். மூத்த மகள் இவளுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் தோலடி பகுதியில் புதிதாக வீடு கட்டி இருந்தார். வீடு கிரகப்பிரவேசம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. மகளின் வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்கராஜ் அங்கு சென்று இருந்தார்.
நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. மேலும் ரொக்க பணம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து தங்கராஜ் பளு கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கைரேகை நிபுணர்களும் பதிவு செய்தனர். உள்ளூர் கொள்ளையர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்திக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.