தஞ்சாவூர் நவ 15.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
இந்தியாவில் இதுவரை 14,300 மலிவு விலை மருந்தகங்களை திறக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1,270 கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் உள்ளன.
இந்நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் சண். ராமநாதன் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் திருச்சி கோட்டை முதன்மை வர்த்தக மேலாளர் ஜெயந்தி மலிவு விலை மருந்தகத் திட்டத்தின் தமிழ்நாடு தலைவர் நாராயணா திருச்சி திட்ட மேலாளர் நசீர் அஹமத், மாமன்ற உறுப்பினர் ஜெய் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.