சங்கரன்கோவில்: மே:24
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி 1 வது வார்டு திருப்பூர் குமரன் நகர் சங்கரன்கோவில் ரயில் நிலைய பாதை அருகே அமைந்துள்ளது. இங்கு வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என்றால் ரயில்வே நிர்வாகம் தடை இல்லா சான்று வழங்கினால்தான் செய்யக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ரயில்வே பாதை அருகில் உள்ள திருப்பூர் குமரன் நகர் பகுதி தெருக்களில் சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்று பெற மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செல்வத்திடம் திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் . இதனை பெற்றுக் கொண்ட மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செல்வம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், 1வது வார்டு கவுன்சிலர் புஷ்பம் ஆகியோர் உடன் இருந்தனர்