நாகர்கோவில், ஜன. 2 –
நாகர்கோவில், கோட்டார் வாகையடி தெருவில் வசிப்பவர் செந்தில். இவரது மனைவி சந்தியா (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தை உள்ளது. இந்த தம்பதியருக்கு இடையில் சமீப நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் கோட்டார் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிய சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் சந்தியா தற்கொலை செய்து கொண்டதையடுத்து நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது.



