மதுரை மார்ச் 5,
மதுரையில் இஸ்லாமியர்கள்
அடக்கஸ்தலம் இன்றி தவிப்பு – மதுரை ஆட்சியரிடம் மனு
மதுரை மாநகர் சிலையனேரி ஆனையூர், ரயிலார் நகர், விளாங்குடி, தினமணி நகர், கோவில்பாப்பாக்குடி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் 1200 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் இறக்கும் போது அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கான அடக்கஸ்தலம் இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக மதுரை அரசரடி பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்திற்கு உடலை எடுத்துச் சென்று உடல் அடக்கம் செய்யபபட்டு வருகிறது. அங்கும் குறைந்த அளவிற்கு இடம் உள்ளதால் ஏற்கனவே அடக்கம் செய்த உடலானது முழுவதுமாக அக்காத நிலையில் உடலை எடுத்துவிட்டு மீண்டும் அடக்கம் செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்களது பகுதியில் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் சேர்த்து ஏதாவது ஒரு இடத்தில் உடல் அடக்கம் செய்வதற்கான அடக்கஸ்தலம் அமைத்து தரவேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளோம். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி மறுத்து வருவதாகவும், எனவே தங்களது பகுதியில் அடக்கஸ்தலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி ஆனையூர், ரயிலார் நகர், விளாங்குடி, தினமணி நகர், கோவில்பாப்பாக்குடி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமாத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.