கிருஷ்ணகிரி- ஜூன்-24-கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவமனை வளாகம் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியில் துவங்கிய பிறகு பழைய மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சையும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் பிரசவம் அறுவை சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகள் பார்க்கப்படுகிறது, பிறந்த பச்சிளம் குழந்தைகள் இருக்கும் இந்த வளாகத்தில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை,
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடைமை பொருட்களை மருத்துவமனை வளாகத்தில் உள்ளே வந்து தூக்கி சென்று சேதப்படுத்துவதாக நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் தெரிவித்தும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளல்லை என்கின்றனர், நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் குளங்குகள் மருத்துவமனை வளாகத்தில் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.