மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் தொழிலதிபர் சங்க கூட்டரங்கில் சிறு மற்றும் குறுந்தொழில்களில் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்திடும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
அந்த வகையில்
தமிழகத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்களில் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்திடும் வகையில் மாநிலம் முழுவதிலும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகேயுள்ள கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கத்தின் கூட்ட அரங்கினில் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம் மற்றும் டான்ஸ்யா-எப்என்எப் சர்வீஸ் சென்டர் இணைந்து சிறு மற்றும் குறுந்தொழில்களின் டிஜிட்டல் மயமாக்கல் என்ற தலைப்பில் சிறு மற்றும் குறுந் தொழில்களில் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்திடும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.