ஈரோடு பிப் 3
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி சதீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இறுதி கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது இதையொட்டி அமைச்சர் முத்துசாமி வேட்பாளர் சந்திர குமாருடன் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பெரிய அக்ரகாரத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம் வீரப்பன் சத்திரம் பெரியார் நகர் மணிகூண்டு பத்ரகாளியம்மன் கோவில் வீதி மரப்பாலம் உட் பட பல்வேறு இடங்களில் நடந்தது வீதி வீதியாக சென்று அவர் பொது மக்களிடம் ஓட்டு கேட்டார்.
அப்போது தி மு க அரசின் திட்டங்களை பொது மக்களிடம் விளக்கி கூறிய அவர் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொது மக்களிடம் வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அப்போது அவர் தி மு க வேட்பாளர் சந்திரகுமாரை அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.