மதுரை, ஏப்ரல் 21
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபத்தின் கட்டுமானப் பணிகளைத் தமிழ்நாடு அரசின் முக்கிய அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், திருக்கோயில் அறங்காவலர் ருக்மணி மற்றும் பழனிவேல்ராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.
மண்டபம் திருப்பணிகள் முறையாக முன்னேறுவதையும், பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலைக்கேற்றவையாகவே தொடரவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் குழுவினர் ஆலோசனை வழங்கினர்.