மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலில் கடந்த 10 தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும்
நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து
16 ஆம் நாள் திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது.
அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார்.
காவல்துறை கூடுதல் கண்
காணிப்பாளர் கருப்பையா, சமயநல்லூர் துணைக் கண்
காண்ப்பாளர்கள் ஆனந்தராஜ்,
ராமலிங்கம் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி சப்
இன்ஸ்
பெக்டர் சேகர், கோவில் செயல் அலுவலர் இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ் அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் ஆலய பணியாளர்கள் உட்பட பக்தர்கள் வடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து தேர் திருவிழாவை தாசில்தார் மூர்த்தி,
மின்சார
வாரிய உதவி
செயற்
பொறியாளர் ராஜேஷ் சோழவந்தான் பாட்டிய
மந்தார் கிராம காவல்
காரர்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுப்பதை துவங்கினார்கள்
தேர், அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி
தெற்கு ரதவீதி மேல ரதவீதி
வடக்கு ரதவீதி வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு தேர் வந்து சேர்ந்தது. தேர் வலம் வருவதற்கு ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக
குடில் கட்டை போட்டு வழிநடத்தி வந்தனர்.
வழிநெடுக அம்மனை வரவேற்று
பூஜைகள் செய்தனர்.
தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம்,
நாணயங்கள் சூரை விட்டனர்,
சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி
குத்தி வலம் வந்தனர்.
நீர்,மோர்,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இன்ஸ்
பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், முத்தையா,
முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப்
பணி மேற்
கொள்ளப்பட்டது. மின்சார
வாரிய உதவி இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் தேர் செல்லும் இடங்களில்
மின் வயர்களை கழற்றி மீண்டும் இணைப்பு கொடுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு,
வட்டப் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சார்பாக 11 வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது
இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்
துறை
பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெறும் சோழவந்தான் காவல்
துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காமாட்சிபுரம் சோழவந்தான் பூ வியாபாரிகள் சார்பாக தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.