மானாமதுரை மே 24
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் இரவில் திருடன் ஒருவன் உள்ளே நுழைந்து திருட முயற்சித்த போது பணம் மற்றும் நகைகள் லாக்கரில் இருந்ததாலும் அபாயச் சங்கு முறை வங்கியில் இருந்ததாலும் திருடனால் அவற்றை திருட முடியவில்லை இந்த காட்சிகள் சிசிடி கேமராவில் பதிவாகி இருந்தது. திருடனை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவலர் குழுவினர் குற்றவாளியை தேடி வந்தனர். சம்மந்தப்பட்ட வங்கி கிளையில் கிடைக்கப்பெற்ற தடயங்களின் அடிப்படையில் மானாமதுரையைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வரவழைத்து காவலர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.