கன்னியாகுமரி நவ 10
கன்னியாகுமரி மாவட்டம் வட்டகோட்டை தத்தாத்ரேயர் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரை செல்லும் குழுவினர் சாமிதோப்பு அய்யா வைகுண்ட அன்பு வனம் வருகை. மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினருக்கு அன்புவனத்தில் வரவேற்பு. மகாராஷ்டிரா மாநிலம் புனே தத்தாத்ரேயர் நாராயண மகராஜ் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் வட்டகோட்டை தத்தாத்ரேயர் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நாராயண்ப்பூர் ஆலயத்திற்கு 36 நாட்களாக டிசம்பர் 15 ஆம் தேதி வரை பாதயாத்திரை செல்கின்றனர். நேற்று காலை வட்டக்கோட்டையில் இருந்து தொடங்கிய பாதையாத்திரை சாமிதோப்பு அய்யா வைகுண்ட அன்பு வனம் வருகை தந்தது. பக்தர்களை அன்புவனம் நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் ,
பேராசிரியர் ஆர் .தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர். பாதயாத்திரை குழுவினர் அன்புவனத்தில் பஜனை பாடி அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.பின்னர் தர்மங்கள் நடந்தது நிகழ்ச்சியில் பாதயாத்திரை பொறுப்பாளர் கஜானந்த், அருண்பாட்டேல்,ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.