மதுரை நவம்பர் 15,
மதுரை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை ஒலிம்பிக் அகாடமி கட்டிடப் பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மதுரை விளையாட்டு வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் பணிகளை தொடங்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.