மதுரை ஏப்ரல் 21
மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர். தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா , மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜன் இணை ஆணையர்/செயல் அலுவலர் எஸ். கிருஷ்ணன்.ஆகியோர் உட்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கோயில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.