மதுரை மார்ச் 17,
மதுரையில் முருகப்பெருமான் தங்க குதிரை வாகனத்தில் பவனி
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா பிரம்மோற்சவிழா
மிக சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று காலையில் முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்ற பிறகு வீதி உலா நடைபெற்றது. மாலையில் அக்கநாயக்கர் மண்டபம் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாதித்த காட்சி அளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில்
இந்து அறநிலைத்துறை கமிஷனர் வருகை புரிந்தார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 18ம் தேதி திருக்கல்யாணம் மறுநாள் 19ஆம் தேதி திருத்தேரோட்டும் நடைபெற உள்ளது..