கன்னியாகுமரி ஏப் 10
நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலமோன் குமரி அனந்தன் மறைவுக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் :-
தமிழக அரசியலில் மூத்த தலைவர் ஐயா குமரி அனந்தன் இழப்பு தமிழுக்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கும் ஒரு பெரும் இழப்பே!
உண்மையான காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரின் தீவிர பின்பற்றாளர்.
காங்கிரஸ் கட்சியின் சில மதிப்பு மிக்க தலைவர்களில் முன்னே நிற்பவர். தமிழின் இலக்கியத்தை. தமிழின் ஆளுமையை எப்போதும் தூக்கிப் பிடித்தவர். அனைத்து அரசியல் கட்சியினரின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர்.
எளிமையான மக்கள் பணி, நினைவில் நிற்கும் தமிழ் தொண்டு இதுவே ஐயா குமரி அனந்தன் அவர்களின் நினைவு முத்திரையாக வரலாறு பதிவு செய்யும்.
அவரது இழப்பில் வாடும் குடும்பத்தார் மற்றும் அக்கா தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.