தமிழ்நாடு எல்லை பகுதியான கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலைப் பகுதியில் கடந்த 25ஆம் தேதி இரவு நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார் நண்பர்களுடன் ஜம்சீர் வேட்டையாடச் சென்றதும் அப்போது மானை சுட்டபோது எதிர்பாரத விதமாக ஜம்சீர் மீது குண்டுகள் பாய்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் 14 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டை அதிகரிப்பது சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையை தடுக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டதிலிருந்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையிலும், சசிகுமார் மேற்பார்வையிலும் மூன்று மாநில எல்லையான பைகரா சந்திப்பில் வன ஊழியர்கள் முதல்முறையாக வன குற்றங்களை தடுக்க சிறப்பு ரோந்து பணியை ஊழியர்கள் முதன்முறையாக மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறும்போது வனத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டின் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு ரோந்து பணியை வனத்துறை குழு அமைத்து தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டனர். 10 குழுக்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுக்கள் தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல் அரசு பேருந்துகளையும் தணிக்கை செய்ய உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் இரவு ரோந்து பணியை மேற்கொள்ள வனத்துறை முடிவெடுத்துள்ளது