ஊராட்சி தலைவர் சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம், நவ.24-
பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். சித்ராமருது தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜ.மருதுபாண்டியன்*, மண்டபம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளரும், பற்றாளருமான ரமேஷ், மண்டபம் ஒன்றிய வேளாண்மைதுறை உதவி பொறியாளர் ஹரிஷ், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் `தமிழக அரசிடம் வரப்பெற்ற 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சிறப்பு தீர்மானமாக பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோத், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இராஜேந்திரன், மக்கள் சட்ட உரிமை கழக கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி*, மகாத்மாகாந்தி நகர் பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் வினோத்கண்ணன் செய்திருந்தார்.