சென்னை, பிப்-12,
சென்னை, பல்லாவரம் சாலை கொளப்பாக்கத்தில்
ஸ்போர்ட்ஸ் டெனின் பிக்லர்ஸ் 3வது பிக்கில் பந்து விளையாட்டு அரங்கு திறப்பு விழா நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி பிக்கில் பந்து வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்.
துவக்க விழாவில் ஆர்.டபிள்யு.டி கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டபிள்யூ.எஸ். ஹபீப், இந்தியம் மென்பொருள் இணை நிறுவனர் ராம் சுகுமார், மற்றும் சாய்கிங்ஸின் இணை நிறுவனர் பாலாஜி சடகோபன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்போர்ட்ஸ் டெனின் பிக்லெர்ஸ்ஸின் உரிமையாளர் சூரஜ் விஸ்வநாதன், பேசுகையில், “எங்கள் நோக்கம் பிக்கில் பந்தாட்டத்தை அனைவரிடமும் எளிதாக கொண்டு செல்வதாகும். மந்தைவெளி மற்றும் ராயப்பேட்டையில் ஏற்கனவே பிக்கில் பந்து அரங்கம் திறக்கப்பட்டதை அடுத்து, கொளப்பாக்கத்தில் எங்கள் 3வது உள்ளரங்கை தொடங்குவதன் மூலம், இந்த விளையாட்டை சென்னை முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்கிறோம் .
வலுவான பிக்கில் பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதையும் அனைத்து வீரர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மிக விரையில் தமிழ்நாடு பிக்கில்பால் பிரீமியர் லீக் (டிஎன்பிபிஎல்) தொடங்க உள்ளது . அதில் பங்கேற்பவர்கள் இங்கு பயிற்சி பெறலாம் என்று அவர் கூறினார்.
சர்வதேச தரத்தில் மூன்று அதிநவீன ஆடுகளம்(44×20 அடி ) இங்கு உள்ளது. வாரத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும். பிக்கில் பந்து ஆர்வலர்களுக்கு தேவையான விளையாட்டு சாதனங்களை வாங்குவதற்கு ஒரு பிரத்யேக விற்பனையகமும் இங்கு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னணி பிக்கில் பந்து வீர்ர் நிர்மல் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.